Thursday, September 6, 2012

உனக்கு துணையாய் என் கவிதைகளை.......!!!!!!!!






காதல்
மறுக்கவும் மறக்கவும்
மறைக்கவும் முடியாத 
இரு உள்ளத்தின் மௌனம்

புரிதல் இருந்தால் 
பிரிவும் இனிக்கும்.........!
இல்லை என்றால்
சேர்ந்திருந்தாலும் கசக்கும்...!
உன் பெயரை
உச்சரித்த
என் இதழ்கள்
உன் வார்த்தைகளை

கேட்ட
என் காதுகள்
உன் பிம்பத்தை

பார்த்த
என் விழிகள்
உன் நினைவுகளை
நினைத்த
என் நினைவுகள்
இவையெல்லாம்...
என்னுள் இருக்கும்வரை
நீயும் என்னுள் இருப்பாய்...
!
தேடிதேடி........... 
வார்த்தைகளை கோர்த்தாலும்
ஏதோ ஒன்று குறைகின்றது..
ஏனென்று கேட்காதே!
உன்னோடு இருக்கும் 
மௌனங்கள்
வார்த்தைகளை விட 
மதிப்பானவை...........!!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.......!!!!!!!!

2 comments:

Unknown said...

very very nice .........

Unknown said...

very very niceeeeee