Tuesday, August 30, 2011


காத்திருப்பின் கனம்.....





காத்திருப்பு 
கடந்த கலங்களை  
கடந்து போனது 
நிகழ்கால நிஜங்கள்
நினைவுகள் ஈரமாக
இன்னும்..... 
கனவுகள் கலையவில்லை 
கண்களின் ஓரங்களில் 
காத்திருப்பின் 
கணங்களுக்குள் 
கனமாகிப்போனது .......!
காலங்கள் மட்டும் அல்ல 
எதிர்கலங்களும் தான் ............!

புன்னைகைக்குள்.......!
என் இதழ்கள்
வர்ர்த்தையற்று மெளனமாய்.....
கதை பேசிய என் கருவிழிகள் 
கண்ணீரை மட்டும் பொழிந்தபடி....! 




மனதில் ஒரு .....விம்பம்


வேதனை கண்ணீரோடும் கலந்திருக்கும் 
ஆன்மாவோடு அழுதும் தோற்றுவிடும் .......?
கனவுகள்.......
வாடிக்கையாய்
வந்து போனாலும்
வசந்தங்கள் தள்ளுபடி விலைக்கு 
விற்பனையாகின்றது ............

மனக் கண்ணாடியில் விழுந்த 
நிஜ விம்பங்களும் 
ஒரு வகையில் 
பகை தான் .........

தவிப்பின் அவஸ்தைகளால்
பெரும்பாலும் சுகங்களும் 
சோகங்களோடு 
உரசிப்பார்க்கும் .............

நினைவுகளுக்கு 
இடைவெளியே 
இல்லாத போது.....
விடுமுறை எப்படி....?

வேதனை கண்ணீரோடும் 
கலந்திருக்கும் 
ஆன்மாவோடு அழுதும் 
தோற்றுவிடும் .......?


........காலமாவது ...........?

மனதினிலே பாரம்
கண்களிலே ஈரம் 
கண்விழிக்கும் நேரம் 
யன்னல் கம்பி ஓரம் 
வெளியுலகம் தெரியாமலும் 
வெண்ணிலவை பார்க்கமுடியாமலும்
சோதனையில் வாழுகின்ற 
சிறகுஒடிந்த  பறவைப்போல் 
எம்  வாழ்வு நேர்ந்தது ஏனோ 
பாரினில் நாம்  வாழுகிறோம்
பாசமின்றி தவிக்கின்றோம் 
பட்டமரம் மீண்டும் தளைக்குமா...?
நெருடிய காலங்கள் பசுமையாய் மலருமா ....?
இளமைக் காலங்கள் வீணாகின
நிகழ்காலம் பாழாகின்றன...