Tuesday, August 30, 2011

........காலமாவது ...........?

மனதினிலே பாரம்
கண்களிலே ஈரம் 
கண்விழிக்கும் நேரம் 
யன்னல் கம்பி ஓரம் 
வெளியுலகம் தெரியாமலும் 
வெண்ணிலவை பார்க்கமுடியாமலும்
சோதனையில் வாழுகின்ற 
சிறகுஒடிந்த  பறவைப்போல் 
எம்  வாழ்வு நேர்ந்தது ஏனோ 
பாரினில் நாம்  வாழுகிறோம்
பாசமின்றி தவிக்கின்றோம் 
பட்டமரம் மீண்டும் தளைக்குமா...?
நெருடிய காலங்கள் பசுமையாய் மலருமா ....?
இளமைக் காலங்கள் வீணாகின
நிகழ்காலம் பாழாகின்றன...

No comments: