Tuesday, August 30, 2011


எனக்குள் ஒரு பயணம்

மனித மனங்கள் 
மரித்துக் கொண்டிருக்கும் 
மண்ணில் மறக்க 
முடியா உன் நினைவுகள் 
மட்டும் இன்னும் 
என்னுள் நிஜமாக.........!
கடந்து சென்ற உன்
நினைவுகளை 
மீட்டிப் பார்கின்றேன்
இதமாக...........!
உன் புன்னகயாலும்,
சுட்டெரிக்கும் இரு விழிகளாலும் 
சுட்டெரித்த அந்த 
இனிமையான நாட்கள் 
திரும்புமா  என் வாழ்வில்..........!
உன் மென்மையான 
வார்த்தைகள் எங்கே 
இதம் தரும் உன் 
அன்பு தான் எங்கே?
சில காலங்கள் உன்னுடனே 
வாழ்ந்து கொண்டிருந்தேன் 
நினைவாலே நான்........!
நினைவுகள் யாவும் 
நிஜமாகும் என்று 
வடித்து வைத்திருந்தேன் ஓவியமதை
உணர்த்துகின்றது வாழ்வு 
அது வெறும் நிழல் என்று..........!
நினைவுகள் யாவும் நிழலாகவும் 
வாழ்க்கை தனிமையிலும் 
சுழன்று கொண்டிருக்கின்றது 
இந்த பூமிதனில் 
பல  கேள்விகளோடு 
நாளும் தொடர்கிறது 
விடை இல்லா என்  பயணம்................!

1 comment:

Anonymous said...

gud job............