Thursday, September 1, 2011



இவனிடம் மட்டுமே




மனசின் பாரங்களை 
மறைக்காமல் கொட்டிட  வேண்டும்..... 
சோகங்கள் ஆயிரம்
சூழ்ந்து  சுமையாக்கிக் கொள்ளும்போது
தேற்றிட........ வேண்டும்.....
ஏக்கங்கள் நெஞ்சில்
ஏராளம் இருக்கையில் 
ஆற்றிட......... .  வேண்டும்
கட்டி வைத்திருக்கும்
கண்ணீரை விட்டு சொல்லி
அழுதிட வேண்டும்........ 
என்று எதிர்பார்ப்பது 
இவனிடம் மட்டுமே 
ஏனெனில் ............
என்னருகில் ............!
எப்போதும்  இருப்பது 
அன்புள்ள இறைவான் .........ஒருவனே.........! 

No comments: