Tuesday, September 13, 2011





எம்மி(இ )னம் 


வலிகள் மட்டுமே 
வாழ்க்கையாகி போனது........! 
எமக்கு  மட்டும் ......... இங்கு 
பிரிந்து இருக்கும் குடும்பங்கள் 
புரியாத உறவுகள் ...அறிந்து 
கொள்ள முடியாத மனிதர்கள்  என 
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் எம்முள்........!  

இங்கு நாம்  சிரிப்பதும் ....
சிரிக்க வைப்பதும் வேஷங்கள் மட்டுமே......!
வருந்துவதை தவிர வேறு வழி 
இல்லாமல் வாழ செய்துவிட்டது சூழ்நிலை........! 
தினமொரு சிந்தனையில் சிக்கி 
சிறுத்துகொண்டு போகிறது மனங்கள் 
திசை அறிய முற்படும் போதெல்லாம் 
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் .........! 
எல்லா தண்டனையும் 
விளைவுகளாய் எம்மிடத்தில் ... .....!
வழி துணைக்கும் வழி காட்டவும் 
எமக்கு  நிழல் தவிர யாருமில்லை இங்கு ...........! 
எம்மில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே 
எம்மை  வழி நடத்து(ம்)கிறது
 
எப்போது................... 
அதுவும்...... விடைபெறுகின்றதோ
அப்போது .............
அனாதையாய் நாம் .................. !!



No comments: