.......................?
மரித்துக் கொண்டிருக்கும்
என் மனதில் கவலைகள்
பல ஆயிரம்.....
கவலைகள் யாவையும்
யாரிடமும் கூற
ஏனோ இடம் தரவில்லை
என் மனம்....
வாழ்வோடு ஒன்றியது வேதனைகள்
மறக்க தான் நினைக்கிறேன்
சிலவற்றை....
இருந்தும் ஏற்க மறுக்கிறது மனம்
வாழ்க்கைக்கு உயிரூட்டிய
உறவுகளையும், நெஞ்சைக்
கசக்கிப் பிழிந்து சென்ற
உறவுகளும்
காலங்கள் பல சென்றிருப்பினும்
மறையாது வேரூன்றி நிற்கிறது
மனதில் .......
வேதனை என்ற சொல்லுக்கு
முகவரிகள் கொடுக்க இயலாததால்
விழி சிந்திய பனித்துளிகளாக
கொட்டித் தீர்த்தது
பேனா மைகள் காகிதத்தின் மேல்
கவிதைகளாக .........
வாழ்வில் சந்தோசங்களை
எட்ட முடியாத தொலைவில்
நின்றுகொண்டிருக்கிறேன் நான்......
என் வாழ்விற்கு நானே அர்த்தம் கூறி
வேதனைகள் யாவும் களைந்த
என் வாழ்வுக்கு நானே விடை தேடி
வாழகிறேன் சந்தோசமாக எனக்கு
அது பிடித்து இருக்கிறது .................
1 comment:
love it
Post a Comment